சுவரின் மறுபக்கம்! கதை, குழந்தைகளுக்கான தமிழ் கதைகள்,Tamil stories for kids

தன் பாட்டி உருவாக்கிய அழகிய தோட்டத்தைப் பக்குவத்துடன் பார்த்து பார்த்து கவனித்து வந்தாள் அந்த அழகான பெண். ஒரு நாள் ஒரு செடியைப் புகைப்படத்தில் பார்த்து, அதன் மலர்களின் அழகில் இலயித்த இந்தப் பெண், அச்செடியை வாங்கி வந்து, தனது தோட்டத்தில் நட்டு வளர்த்து வந்தாள். அந்தச் செடிக்கென பிரத்யேக கவனிப்பு அளித்து வளர்த்து வந்தாள்.

நாட்கள், வாரங்கள், மாதங்கள் பல கடந்தும், அச்செடிப் பூக்களைப் பூக்காமல் இருந்தது கண்டு, மனமுடைந்த அப்பெண் அச்செடியை அகற்றி விட முடிவெடுத்தாள். அச்சமயம் பக்கத்து வீட்டு முதியவர் இப்பெண்ணை அழைத்து, “அழகான மலர்களைத் தரும் செடியை நட்டு, என் மனதை இன்பவெள்ளத்தில் ஆழ்த்தினாய்.இந்த வயதான காலத்தில் மனம் குழம்பி, தனிமையில் வாடிக்கொண்டிருந்த எனக்கு, நீ நட்டு வைத்த செடியில் பூத்த மலர்கள் மனமாற்றத்தை அளித்தன; அவற்றை காணும் பொழுதெல்லாம் என் மனம் பேருவகை அடைகிறது!”என்று மனம் நெகிழ்ந்தாள் அந்த மூதாட்டி.

அப்பொழுது தான் சுவரின் மறுபக்கத்தில் அழகான மலர்கள் மலர்ந்திருந்ததையும், தனது சுவரில் இருந்த பிளவுகளால், மலர்கள் எதுவும் பூக்காமல் இருந்ததையும், அந்தப் பெண் கவனித்தாள். மலர்களைக் கண்டு அவளும் பெரும்மகிழ்ச்சி அடைந்தாள்.

No comments:

Post a Comment

1-5 classes Math games collection for kids

 தொடக்க நிலை மாணவர்களுக்கான கணித விளையாட்டுகள் தொகுப்பு 1 முதல் 5 வகுப்புகளுக்கு மிகவும் பயன்தரும் விளையாட்டுகளின் சிறப்பான தொகுப்பு