மூத்தோர் சொல் கேள்! கதை, குழந்தைகளுக்கான தமிழ் கதைகள்,Tamil stories for kids

ஒரு தாய் நாய் அதன் குட்டிகளுடன் ஒரு வயலின் அருகில் வசித்து வந்தது.எப்பொழுதும் தாய் நாய்க் குட்டிகளிடம், எங்கு வேண்டுமானாலும் சென்று விளையாடுங்கள், ஆனால் அந்த கிணற்றின் அருகே செல்ல வேண்டாம் என்று கூறி இருந்தது. ‘அன்னை ஏன் கிணற்றின் அருகே செல்ல வேண்டாம் என்று கூறுகிறார்? அப்படி அங்கு என்ன தான் இருக்கிறது’ என யோசித்த ஒரு குட்டி நாய், கிணற்றின் அருகே சென்று எட்டிப் பார்த்தது.

அச்சமயம் நாயின் பிரதிபலிப்பு நீரில் தோன்றியது; குட்டி நாய் என்னென்ன செய்கிறதோ, அதை கிணற்று நீர் பிரதிபலித்தது. ஆனால் கிணற்றின் உள்ளே இருக்கும் வேறொரு நாய் தன்னைக் கேலி செய்வதாக எண்ணிய குட்டி நாய், அந்த கிணற்றிலிருக்கும் நாயுடன் சண்டையிடும் நோக்கில், கிணற்றில் குதித்தது. குதித்த பின்னர் தான் நாய்க்குப் புரிந்தது; அது தனது பிரதிபலிப்பு என்று. மேலே எப்படி செல்வது என்று அறியாமல், குரைத்து கொண்டே நீரில் நீந்திக்கொண்டிருந்தது குட்டி நாய்.

நாயின் குரைப்பு சத்தம் கேட்ட விவசாயி, நாயைக் கிணற்றில் இருந்து காப்பாற்றினார்; அச்சமயம் தாய்நாயின் அறிவுரையை மீறியது எத்தனை பெரிய தவறு என்று உணர்ந்து கொண்டது.

No comments:

Post a Comment

1-5 classes Math games collection for kids

 தொடக்க நிலை மாணவர்களுக்கான கணித விளையாட்டுகள் தொகுப்பு 1 முதல் 5 வகுப்புகளுக்கு மிகவும் பயன்தரும் விளையாட்டுகளின் சிறப்பான தொகுப்பு