ஒட்டகமும் அதன் குழந்தையும்! கதை, குழந்தைகளுக்கான தமிழ் கதைகள்,Tamil stories for kids

ஒரு ஒட்டகமும் அதன் குட்டியும் பேசிக்கொண்டிருந்தன; அப்பொழுது ஒட்டகக் குட்டி, தாயிடம்,” நமக்கு ஏன் திமில் உள்ளது?” என்று கேட்டது; அதற்கு தாய் நாம் பாலைவனத்தில் தண்ணீர்த் தாகம் இன்றி வாழ திமில் உதவும். பின்னர் குட்டி கேட்டது,”நமக்கு வட்டமானப் பாதம் இருப்பதேன்?” என்று. அதற்கு தாய், பாலைவன மணலில் நாம் நடக்க இந்த வட்டமான பாதம் உதவும் என்று பதிலளித்தது.

பின்பு குட்டித் தாயிடம்,” நமக்கு நீளமாக காது மடல்கள் இருப்பதேன்?” என்று கேட்டது. அதற்கு தாய்,” பாலைவனத்தில் மணல் நம் காதுகளுக்குள் சென்று விடாமல் தடுக்கவே பெரிய காது மடல்கள் நமக்கு அளிக்கப்பட்டுள்ளன.” என்று விடை அளித்தது.

எல்லா பதில்களையும் கேட்ட குட்டி ஒட்டகம்,”இவை அனைத்தும் நாம் பாலைவனத்தில் இருந்தால் தானே பயன்படும், நாம் இருப்பதோ சரணாலயத்தில் அல்லவா? பின் இவற்றால் என்ன பயன்?”என்று கேட்டது. இதைக் கேட்ட தாய் வாயடைத்து நின்றது.

No comments:

Post a Comment

1-5 classes Math games collection for kids

 தொடக்க நிலை மாணவர்களுக்கான கணித விளையாட்டுகள் தொகுப்பு 1 முதல் 5 வகுப்புகளுக்கு மிகவும் பயன்தரும் விளையாட்டுகளின் சிறப்பான தொகுப்பு