தாய் அன்பு

தாய், வயலில் வேலை செய்து கொண்டிருந்தாள். அவள் குழந்தை... பக்கத்தில் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தது.
வேலை மும்மரத்தில் தாய் சிறிதுநேரம் குழந்தையைக் கவனிக்கவில்லை. திடீரென ஞாபகம் வந்து பார்த்தபோது.... குழந்தை கைபிடியில்லாத ஒரு கிணற்றின் விளிம்பருகே நின்று கொண்டிருந்ததைக் கவனித்தாள்.
அடுத்து.... ஒரு அடி எடுத்து வைத்தாலும் குழந்தை கிணற்றுக்குள் விழுந்துவிடும். கூட இருந்தவர்கள் பதைபதைத்தார்கள்.
தாய், சிறிது கூட யோசிக்காமல் கொஞ்ச தூரம் மெதுவாக நடந்துசென்று..... குழந்தையைப் பார்த்து, ''பாப்பா, அம்மா வீட்டுக்குக் கிளம்பிவிட்டேன். நீ வருகிறாயா? இல்லையா?'' என்று சப்தம் போட்டு சொன்னாள்.
அடுத்த நிமிடம் குழந்தை திரும்பி தாயைப் பார்த்து ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டது!
தாயன்பு... அந்த இக்கட்டான நேரத்தில் சமயோசிதமாக சிந்திக்க வைத்தது!

No comments:

Post a Comment

1-5 classes Math games collection for kids

 தொடக்க நிலை மாணவர்களுக்கான கணித விளையாட்டுகள் தொகுப்பு 1 முதல் 5 வகுப்புகளுக்கு மிகவும் பயன்தரும் விளையாட்டுகளின் சிறப்பான தொகுப்பு